districts

img

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குடைகள் வழங்கும் விவசாயி

மயிலாடுதுறை, டிச.3 - மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விவசாயி ஒருவர் தனது சொந்த செலவில் குடைகள் வாங்கித் தந்துள்ளார். சீர்காழி அருகே அகரவட்டாரம் கிரா மத்தைச் சேர்ந்தவர் வரதராஜன், முற்போக்கு  இயற்கை விவசாயியான இவர், அகர வட்டாரம் பகுதியில் தனக்கு சொந்தமான நிலங் களில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார்.

மேலும், தான் கல்வி பயின்ற நல்லநாயக புரம் பள்ளி மற்றும் தொடு வாய், மாதானம், எருக்கூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவ-மாணவி கள், மழைக்காலத்தில் இடை விடாது பள்ளிகளுக்குச் சென்று  கல்வி பயில ஏதுவாக குடை கள் வழங்கி வருகிறார்.

  இந்நிலையில் திங்களன்று  நல்லநாயகபுரம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் பயிலும் சுமார் 50 மாணவர் களுக்கு குடைகளை விவசாயி வரதராஜன் வழங்கினார். அத னைத் தொடர்ந்து தொடுவாய் கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும், மாதானம், எருக்கூர் ஆகிய கிராமங்களில் உள்ள பள்ளிகளிலும் குடைகளை வழங்கினார்.  இந்நிகழ்ச்சிகளில் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், நாராயணன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.